sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரத்தில் மயானத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவில் இடித்து அகற்றம்

/

விழுப்புரத்தில் மயானத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவில் இடித்து அகற்றம்

விழுப்புரத்தில் மயானத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவில் இடித்து அகற்றம்

விழுப்புரத்தில் மயானத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவில் இடித்து அகற்றம்


ADDED : மே 02, 2024 02:20 AM

Google News

ADDED : மே 02, 2024 02:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:விழுப்புரம் வழுதரெட்டியில் மயானத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவிலை போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது.

விழுப்புரம் வழுதரெட்டி காலனியில், கலைஞர் அறிவாலயம் பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான மயானம் உள்ளது.

இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து 7 கூரை வீடுகள், ஒரு கல்வீடு, அங்காளம்மன் கோவில் மற்றும் பெரியாயி அம்மன் கோவில் கட்டியுள்ளனர். 4 ஆண்டிற்கு முன் அங்காளம்மன் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினர்.

இந்நிலையில், மயான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மயான ஆக்கிரமிப்பை அகற்ற 2 ஆண்டிற்கு முன் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து 4 மாதங்களுக்கு முன் அதிகாரிகள் நான்கு கூரை வீடுகளை அகற்றினர்.

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் காலஅவகாசம் கோரியதால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று காலை 7 மணிக்கு, டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன், நகராட்சி ஆணையர் ரமேஷ், நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பெரியாயி அம்மன் கோவிலை இடித்து அகற்றினர்.

தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்காளம்மன் கோவிலை இடிக்க முயன்றனர். உடன் அப்பகுதி கவுன்சிலர்கள் வி.சி., பெரியார், அ.தி.மு.க., கலை மற்றும் பொதுமக்கள் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களிடம், அதிகாரிகள் இது கோர்ட் தீர்ப்பு. ஏற்கனவே 2 ஆண்டு அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. கோர்ட் அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும். அதனால், இனி அவகாசம் வழங்க முடியாது. கோர்ட்டில் தான் நீங்கள் முறையிட வேண்டும் என்றனர்.

அப்போது பெண்கள், அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது மண்ணை அள்ளி வீசினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, கோவிலை மாற்றியமைக்க அரசு தரப்பில் இடம் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனையேற்று ஒரு வாரம் அவகாசம் அளித்த அதிகாரிகள், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை ஒத்திவைத்து காலை 9:30 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us