sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விதிகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் விதை விற்க தடை விதிக்கப்படும் வேளாண் துணை இயக்குனர் எச்சரிக்கை

/

விதிகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் விதை விற்க தடை விதிக்கப்படும் வேளாண் துணை இயக்குனர் எச்சரிக்கை

விதிகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் விதை விற்க தடை விதிக்கப்படும் வேளாண் துணை இயக்குனர் எச்சரிக்கை

விதிகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் விதை விற்க தடை விதிக்கப்படும் வேளாண் துணை இயக்குனர் எச்சரிக்கை


ADDED : செப் 08, 2024 06:23 AM

Google News

ADDED : செப் 08, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் சம்பா பருவ நெல் சாகுபடி பணிகள் துவங்கி நடப்பதாக விதை ஆய்வு துணை இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் மொத்த, சில்லரை விதை விற்பனையாளர்கள் தரமான சான்று பெற்ற நெல் விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து அதிகளவில் சன்னரக உண்மை நிலை மற்றும் சான்று பெற்ற நெல் விதைகள் பெறப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

பிற மாநிலங்களில் இருந்து பெறப்படும் சான்று பெற்ற விதைகளுக்கு உரிய படிவம் 2 மற்றும் தனியார் ரக உண்மை நிலை விதைகளுக்கான பதிவு சான்று, பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல் ஆகியவற்றை தவறாமல் உற்பத்தியாளர்களிடம் பெற்று, ஆய்வின் போது காண்பிக்க வேண்டும்.

புதிய ரகங்கள், இந்த பருவத்திற்கு ஏற்றதா என அறிந்து கொள்முதல் செய்து விற்க வேண்டும். பெற்ற விதைகளை மரச்சட்டங்களின் கீழ் வைத்து ஈரப்பதம் பாதிக்காமல் உரம், பூச்சி மருந்துகளோடு இல்லாமல் தனியாக இருப்பு வைத்து பராமரிக்க வேண்டும்.

உரம், பூச்சி மருந்துகளோடு சேர்த்து இருப்பு வைத்தால் விதைகளின் முளைப்புதிறன் பாதிக்க வாய்ப்புள்ளது. சரியான சேமிப்பு முறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் விதை விற்பனை செய்ய தடை விதிப்பதோடு, உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

விதை வாங்கும் விவசாயிகளுக்கு விற்பனை பட்டியல் கண்டிப்பாக வழங்க வேண்டும். விற்பனை பட்டியல் உரிய படிவத்தில் பயிர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், உற்பத்தியாளர் பெயர் ஆகிய அனைத்து விபரங்களையும் குறிப்பிட்டு கையெழுத்து பெற்று வழங்க வேண்டும். இந்த சட்ட விதிகளை மீறுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us