/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் ஆய்வு
/
வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 16, 2024 05:14 AM

மரக்காணம், : மரக்காணம் பகுதியில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மரக்காணம் ஒன்றியம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில், முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு நிரந்த வீடுகள் கட்டப்படுகிறது.
ஒரு வீடு 5 லட்சத்து 31 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பில் 4 ஒருங்கிணைந்த குடியிருப்பு தொகுப்பிற்கு 21 லட்சத்து 27 ஆயிரம் என, மொத்தம் 23.4 கோடி ரூபாய் மதிப்பில் 300 சதுர அடி பரப்பளவில் நான்கு வீடுகள் ஒருங்கிணைந்த தொகுப்பு என, 440 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, முதலியார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியை பார்வையிட்டு மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர உத்தரவிட்டார்.
செட்டி நகரில், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 7 கோடி ரூபாய் மதிப்பில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர் மீன்பிடி துறைமுக உபகோட்டம் கடலுார் செல்வராஜி, உதவி இயக்குநர் மீன்வளத்துறை நித்யபிரியதர்ஷினி, உதவி பொறியாளர் சிவசூரியன், தாசில்தார் பாலமுருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.