sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம் கொட்டும் மழையில் பக்தர்கள் பரவசம்

/

மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம் கொட்டும் மழையில் பக்தர்கள் பரவசம்

மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம் கொட்டும் மழையில் பக்தர்கள் பரவசம்

மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம் கொட்டும் மழையில் பக்தர்கள் பரவசம்


ADDED : ஆக 06, 2024 12:34 AM

Google News

ADDED : ஆக 06, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி:மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் ஆடி அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்தாக விடியற்காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க காப்பு அலங்காரம் நடந்தது.

இரவு 11:00 மணிக்கு ஆதிசக்தி அங்காளி அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மகாதீபாரதனையுடன், கோவில் பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடி ஊஞ்சல் உற்சவத்தை நடத்தினர்.

வழக்கமாக நள்ளிரவு 12:00 மணி வரை நடக்கும் ஊஞ்சல் உற்சவம் மழை பெய்ததால் 11:20 மணிக்கு நிறைவு செய்தனர். இரவு 9:00 மணிக்கு துவங்கிய கனமழை 12:00 மணி வரை நீடித்தது. இருப்பினும் பக்தர்கள் மழையில் நனைந்தபடி சுவாமி தரிசனம் செய்தனர்.

அமைச்சர் மஸ்தான், ஆம்பூர் எம்.எல்.ஏ., வில்வநாதன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us