ADDED : ஏப் 04, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் தனியார் பஸ் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
விக்கிரவாண்டி அருகே சிறுவாலை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்,70; இவர், விழுப்புரத்தில் உள்ள திருச்சி நெடுஞ்சாலையில் நின்றிருந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பஸ் திடீரென பன்னீர்செல்வம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

