ADDED : மார் 10, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே மயங்கி விழுந்த மூதாட்டி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வளவனுார் அடுத்த பரசுரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி அம்மாள், 85; பார்வை குறைபாடு உடைய இவர், நேற்று முன்தினம் மலட்டாறு கரையோரம் சென்றார். வயது மூப்பு காரணமாக ஆற்றங்கரையில் மயங்கி விழுந்து இறந்தார்.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.