sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரூ.20 லட்சம் சீட்டு பணத்துடன் ஊழியர் மாயம்: போலீசார் தேடல்

/

ரூ.20 லட்சம் சீட்டு பணத்துடன் ஊழியர் மாயம்: போலீசார் தேடல்

ரூ.20 லட்சம் சீட்டு பணத்துடன் ஊழியர் மாயம்: போலீசார் தேடல்

ரூ.20 லட்சம் சீட்டு பணத்துடன் ஊழியர் மாயம்: போலீசார் தேடல்


ADDED : செப் 04, 2024 03:23 AM

Google News

ADDED : செப் 04, 2024 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் ரூ.20 லட்சம் சீட்டு பணத்துடன் மாயமான தனியார் ஏலச் சீட்டு நடத்தும் அலுவலக மேலாளரை போலீசார் தேடிவருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த சாலாமேடு மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் சங்கர் மகன் பிரபாகரன்,32; இவர், கே.கே., ரோட்டில் உள்ள தனியார் டிஜிட்டல் டிசைனர் மற்றும் ஏலச் சீட்டு நடத்தும் அலுவலகத்தில், மேலாளராக கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, அலுவலகத்தில் கணக்குகளை முடித்துவிட்டு, ரூ.20 லட்சம் சீட்டு பணத்தை, அண்ணாச்சி என்பவரிடம் வாங்கிக் கொண்டு, மாம்பழப்பட்டு சாலையில் உள்ள, ஏலச்சீட்டு நிறுவனத்திற்கு சொந்தமான டிஜிட்டல் நிறுவன அலுவலகத்தில் கோவிந்த் என்பவரிடம் ஒப்படைக்க புறப்பட்டு சென்றார்.

ஆனால், பிரபாகரன் அலுவலகத்துக்கும் செல்லவில்லை, அவரது வீட்டிற்கும் செல்லவில்லை.

இதுகுறித்து, டிஜிட்டல் நிறுவனம் சார்பிலும், வேலைக்குச் சென்ற தனது கணவரை காணவில்லை என பிரபாகரனின் மனைவி கயல்விழி,28; சார்பிலும் நேற்று காலை விழுப்புரம் மேற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, மாயமான பிரபாகரனை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us