sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி விழுப்புரத்தில் நுழைவுத் தேர்வு

/

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி விழுப்புரத்தில் நுழைவுத் தேர்வு

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி விழுப்புரத்தில் நுழைவுத் தேர்வு

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி விழுப்புரத்தில் நுழைவுத் தேர்வு


UPDATED : ஜூலை 14, 2024 03:40 PM

ADDED : ஜூலை 14, 2024 03:39 PM

Google News

UPDATED : ஜூலை 14, 2024 03:40 PM ADDED : ஜூலை 14, 2024 03:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:

மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு, நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி அளிப்பதற்கான நுழைவு தேர்வு விழுப்புரத்தில் நடந்தது.

தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தில், படித்த இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க தனி பிரிவு தொடங்கி, அதன் மூலம் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளது.

அதன்படி, ரயில்வே, வங்கிப் பணி ஆகிய தேர்வுகளுக்காக, தேர்ந்தெடுக்கப்படும் 1,000 மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படுகிறது.

இதற்காக, தமிழகம் முழுதும், வங்கி பணிகள், ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுத்தேர்வு, மாவட்ட தலைநகரங்களில் நடந்தது.

விழுப்புரத்தில் வங்கி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பீமநாயக்கன் தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நுழைவுத் தேர்வு நடந்தது. 158 பேர் விண்ணப்பித்திருந்தில், 103 பேர் தேர்வு எழுதினர்.

இதே போல், விழுப்புரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ரயில்வே பணியாளர் தேர்வு பயிற்சிக்காக நுழைவுத் தேர்வு நடந்தது. இதற்கு விண்ணப்பித்த 344 பேரில், 204 பேர் தேர்வு எழுதினர். காலை 10:00 மணிக்கு துவங்கி 11:00 மணி வரை தேர்வு நடந்தது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, விரைவில், சென்னையில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us