/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., பள்ளி சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
/
இ.எஸ்., பள்ளி சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 07, 2024 11:51 PM

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., மெட்ரிக் மேல்நிலை பள்ளி 2023-24ம் கல்வியாண்டின் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி அளித்து வருகிறது. தேர்வில் மாணவர்கள் 99 சதவீதம் பேர் முதல் வகுப்பிலும், 60 சதவீதம் பேர் சிறப்பு நிலையிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர் வசந்த் 600க்கு 577, மாணவி அக்ஷயா 567 , அபிநயா 563 மதிப்பெண் பெற்று முதல் மூன்றாம் இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
பள்ளிக்கு தேர்ச்சி மற்றும் மதிப்பெண் அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை தாளாளர் செல்வமணி, செயலாளர் பிரியா, முதல்வர் லலிதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

