/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
/
மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
ADDED : மே 02, 2024 06:41 AM
வானுார், : கிளியனுார் அருகே புளிய மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிளியனுார் அடுத்த தென்கோடிப்பாக்கம் அருகேயுள்ள கீழ்சித்தாமூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை, 70; ஏழுமலை, கடந்த மாதம் 29ம் தேதி வீட்டில் பின் புரம் உள்ள புளியமரத்தில் ஏறி, புளியம்பழம் பறித்துள்ளார். அப்போது, மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
உடன் அவரை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

