ADDED : ஆக 10, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
வளவனுார் அடுத்த தொந்திரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகள் நர்மதா, 17; இவர், விழுப்புரம் கல்லுாரியில் பி.எஸ்சி., கணிதம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் கடைவீதிக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
முருகன் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.