ADDED : ஆக 13, 2024 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் மகள் காவியா, 22; விழுப்புரத்தில் தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., கணினி அறிவியல் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
ராமதாஸ் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.