ADDED : மார் 12, 2025 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: மகனைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தென்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி மகன் ஆகாஷ், 16; பேரங்கியூர் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த மாதம் 27ம் தேதி மாலை 6:00 மணியளவில் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாரி அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.