/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மறுவாழ்வு இல்லத்தில் உணவு வழங்கல்
/
மறுவாழ்வு இல்லத்தில் உணவு வழங்கல்
ADDED : மார் 07, 2025 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : பாஞ்சாலம் கிராமத்திலுள்ள மறுவாழ்வு மையத்தில் மாஜி அமைச்சர் உணவு வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டிவனம் அருகே பாஞ்சாலத்திலுள்ள தொழுநோய் மறுவாழ்வு இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,பொறுப்பாளர் மஸ்தான் உணவு வழங்கினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,மாசிலாமணி, ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணை சேர்மன் ராஜாராம், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ், கொடியம்குமார், திருஞானசம்பந்தம், கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.