sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நண்பனை கொலை செய்வதை வேடிக்கை பார்த்த மூவர் உட்பட 4 பேர் கைது

/

நண்பனை கொலை செய்வதை வேடிக்கை பார்த்த மூவர் உட்பட 4 பேர் கைது

நண்பனை கொலை செய்வதை வேடிக்கை பார்த்த மூவர் உட்பட 4 பேர் கைது

நண்பனை கொலை செய்வதை வேடிக்கை பார்த்த மூவர் உட்பட 4 பேர் கைது


ADDED : பிப் 22, 2025 01:39 AM

Google News

ADDED : பிப் 22, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: குடி போதையில் நண்பனை கொலை செய்த நபர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மரக்காணம் அடுத்த கந்தாடு கிராமத்தில் முட்புதாரில் வெட்டு காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை நேற்று முன்தினம் போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில், செங்கல்பட்டு மாவட்டம், வெள்ளகொண்ட அகரத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் ஜெயசீலன்,40; இவரது நண்பர் மரக்காணம் அடுத்த பிளாரிமேட்டைச் சேர்ந்த எட்டியான் மகன் கரண்குமார்,26; என்பவருடன் கடந்த 19ம் தேதி மாலை மது அருந்திய போது ஏற்பட்ட தகாறில் ஜெயசீலனை, கரண்குமார் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இதனையெடுத்து நேற்று முன்தினம் கரண்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் தெரியவந்ததாவது:

கடந்த 19ம் தேதி காலை 11:00 மணிக்கு ஜெயசீலன் புதுச்சேரியில் இருந்து மது வாங்கி வந்தார். பின்னர் கரண்குமார், மரக்காணம் சம்புவெளி தெரு வேலு மகன் சீத்தாராமன், 22; நகரான் தெரு பெரியதம்பி மகன் கீர்த்திஸ்வரன், 23; கந்தாடு காமராஜ் மகன் பரணிதரன், 20; ஆகிய 5 பேரும் ஒன்றாக மது அருந்தினர்.

அப்போது ஜெயசீலன், கரண்குமாரிடம் கந்தாடு கதிரவன், 'உன்னை கொலை செய்ய போகிறான்' என கூறியுள்ளார். அதற்கு கரண்குமார், 'நான் உன்னை கொலை செய்து விடுவேன்' என கூறினார். அதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. , ஜெயசீலன், கரண்குமாரை கத்தியால் வெட்ட முயன்றபோது, கரண்குமார் கத்தியை பிடுங்கி ஜெயசீலனை வெட்டி கொலை செய்துள்ளார். அதனை, சீத்தாராமன், கீர்த்திஸ்வரன், பரணிதரன் ஆகியோர் தகராறை விலக்கி விடாமல் வேடிக்கை பார்த்ததோடு, போலீசாருக்கு தகவலை தெரிவிக்காமல், தலைமறைவானது தெரிய வந்தது.

அதன்பேரில், சீத்தாராமன், கீர்த்திஸ்வரன், பரணிதரன் ஆகியோரை கைது செய்தனர்.

இ.சி.ஆரில் மறியல்

ஒருவர் மட்டும் குற்றவாளி எனவும், 4 பேரிடம் விசாரணை என்ற பெயரில் போலீஸ் ஸ்டேஷனில், அவர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்பதாக, இறந்தவரின் உறவினர்கள் நேற்று காலை 11:30 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். பின்னர், பகல் 12:30 மணிக்கு புதுச்சேரி - சென்னை இ.சி.ஆரில் பூமிஸ்வரன் கோவில் எதிரில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று 1:00 மணிக்கு மறியலை கைவிட்டனர்.








      Dinamalar
      Follow us