ADDED : செப் 09, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் அடுத்த ரெட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடந்த விழாவிற்கு, அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மயிலம் சேர்மன் யோகேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் கிஷோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கலையரசன் வரவேற்றார்.
விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், ஒன்றிய செயலாளர் மணிமாறன், பரந்தாமன், துணை தலைமை ஆசிரியர் பாலசுந்தரம் வாழ்த்திப் பேசினர். பொதுக்குழு உறுப்பினர் ரவி, விவசாய அணி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.