/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏழை மாணவர்களுக்கு இலவச 'நீட்' பயிற்சி; விழுப்புரம் பட்டதாரி இளைஞர் சமூக சேவை
/
ஏழை மாணவர்களுக்கு இலவச 'நீட்' பயிற்சி; விழுப்புரம் பட்டதாரி இளைஞர் சமூக சேவை
ஏழை மாணவர்களுக்கு இலவச 'நீட்' பயிற்சி; விழுப்புரம் பட்டதாரி இளைஞர் சமூக சேவை
ஏழை மாணவர்களுக்கு இலவச 'நீட்' பயிற்சி; விழுப்புரம் பட்டதாரி இளைஞர் சமூக சேவை
ADDED : மே 03, 2024 12:15 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி மையத்தை, பட்டதாரி இளைஞர் சமூக சேவையாக நடத்தி வருகிறார்.
விழுப்புரம், வி.மருதுாரைச் சேர்ந்தவர் வினித், 22; முதுகலை பட்டதாரி. இவர், சென்னை பல்கலைக் கழகத்தில் பி.எச்டி., ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். சமூக சேவையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். கிராமப்புற ஏழை மாணவர்கள், அரசு தேர்வுகளில் அதிகளவில் வெற்றி பெற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதற்காக, விழுப்புரம் கே.கே.ரோடு மாந்தோப்பு தெருவில், கடந்த 2022ம் ஆண்டு அரிஸ்டாட்டில் அகாடமி கல்வி நிறுவனத்தைத் துவக்கினார்.
இங்கு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக 10ம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4. வி.ஏ.ஓ., தேர்வு, சப் இன்ஸ்பெக்டர் தேர்வு ஆகியவற்றுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.
இங்கு பயிற்சி பெற்ற பலரும் அரசு தேர்வு மற்றும் காவல்துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, அரசுப் பள் ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச 'நீட்' தேர்வு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
மேலும் விழுப்புரம், பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்காணிப்பு கேமரா வசதியும், 1 லட்சம் ரூபாய் மதிப்பில் மேஜை, நாற்காலிகளையும் வழங்கியுள்ளார்.
இவரது சேவையை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.