sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விவசாயிகளுக்கு வழங்க இலவச மரக்கன்று தயார்

/

விவசாயிகளுக்கு வழங்க இலவச மரக்கன்று தயார்

விவசாயிகளுக்கு வழங்க இலவச மரக்கன்று தயார்

விவசாயிகளுக்கு வழங்க இலவச மரக்கன்று தயார்


ADDED : ஆக 08, 2024 11:16 PM

Google News

ADDED : ஆக 08, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்,: திண்டிவனம், மரக்காணம் பகுதி விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்க உள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

திண்டிவனம் அடுத்த எறையானுாரில் உள்ள வனத்துறையில் இந்த ஆண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க தேக்கு, மகாகனி, வேம்பு, புங்கன், புளி, நீர்மருது உள்ளிட்ட 50 ஆயிரம் மரக்கன்றுகள் மரக்காணம், திண்டிவனத்தில் வனத்துறை நாற்றங்காலில் தயார் நிலையில் உள்ளது.

பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டத்தின் கீழ் இலவசமாக விவசாயிகளுக்கு நட்டு தரப்படும். மேலும், பசுமை தமிழக திட்டத்தில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.

பருவமழை தொடங்கும் நிலையில் உள்ள காரணத்தினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய ஆதார், பட்டா, சிட்டா, வங்கி புத்தக நகல்கள் மற்றும் இரண்டு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் திண்டிவனம் வனச்சரக அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

விவசாய நிலங்களை தணிக்கை செய்து நிலங்களுக்கு உகந்த மரக்கன்றுகள் வழங்கப்படும்.

இவ்வாற செய்திக்குறிப்பில் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us