sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சத்தீஸ்கரில் மேலும் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

/

சத்தீஸ்கரில் மேலும் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் மேலும் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் மேலும் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை


ADDED : டிச 04, 2025 02:34 PM

Google News

ADDED : டிச 04, 2025 02:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிஜப்பூர்: சத்தீஸ்கரில் மேலும் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.

நாட்டில் நக்சல்களை 2026ம் ஆண்டு மார்ச்சுக்குள் முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதையடுத்து நக்சல்களை ஒடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கரின் பிஜப்பூர், தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள கங்கலுார் வனப்பகுதியில், நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர், பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்ட ரிசர்வ் போலீசார், மத்திய ரிசர்வ் போலீசின் கோப்ரா பிரிவினருடன் இணைந்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டனர். பதிலுக்கு அவர்களும் சுட்டனர். இந்நிலையில் இன்று (டிச.,04) 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஏற்கனவே, நேற்று நடந்த நடந்த சண்டையில், 12 நக்சல்கள் கொல்லப்பட்டனர். இதனால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. இந்த சம்பவத்தையும் சேர்த்து சத்தீஸ்கரில் இந்தாண்டில் மட்டும், 281 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 246 நக்சல்கள் பஸ்தார் பகுதியை சேர்ந்தவர்கள்.






      Dinamalar
      Follow us