sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு கல்லுாரி ஆசிரியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

/

அரசு கல்லுாரி ஆசிரியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

அரசு கல்லுாரி ஆசிரியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

அரசு கல்லுாரி ஆசிரியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 13, 2024 07:41 AM

Google News

ADDED : செப் 13, 2024 07:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் அரசு கலை அறிவியல் கல்லுாரி எதிரில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார்.

கூட்டு நடவடிக்கைக்குழு உறுப்பினர் விஜயரங்கம், மண்டல செயலாளர் தண்டாயுதபாணி, கிளைத்தலைவர் வெங்கடேசன், இணைச்செயலாளர் ஜோதிப்பிரியா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

பழைய ஓய்வூதியம், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புதல், மாற்றுப்பணியில் உள்ள ஆசிரியர்களை திரும்பபெறக் கோருதல், புத்தொளி, புத்தாக்கப் பயிற்சிக்கு கால நீட்டிப்பு வழங்குதல், பேராசிரியர் பணிமேம்பாடு வழங்குதல், முனைவர் பட்ட ஊக்க ஊதியம் வழங்குதல், ஆசிரியர் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வை நடத்துதல், கல்லுாரி ஆசிரியர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்தக் கோருதல், கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் மாத ஊதியம் வழங்கக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிளை பொருளாளர் அசோகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us