/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி சென்ற அரசு டவுன் பஸ் மாணவர்களால் கல்லுாரிக்கு இயக்கம்; திண்டிவனத்தில் பரபரப்பு
/
செஞ்சி சென்ற அரசு டவுன் பஸ் மாணவர்களால் கல்லுாரிக்கு இயக்கம்; திண்டிவனத்தில் பரபரப்பு
செஞ்சி சென்ற அரசு டவுன் பஸ் மாணவர்களால் கல்லுாரிக்கு இயக்கம்; திண்டிவனத்தில் பரபரப்பு
செஞ்சி சென்ற அரசு டவுன் பஸ் மாணவர்களால் கல்லுாரிக்கு இயக்கம்; திண்டிவனத்தில் பரபரப்பு
ADDED : செப் 06, 2024 12:18 AM

திண்டிவனம் : திண்டிவனத்திலிருந்து செஞ்சிக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சை, கல்லுாரி மாணவர்கள் வலுக்கட்டாயமாக கல்லுாரிக்கு கொண்டு சென்றதால் பரபரப்பு நிலவியது.
திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையத்திலிருந்து, காலை நேரத்தில் கல்லுாரிக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அப்படி இருந்தும் கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
இன்னும் கூடுதல் பஸ்களை இயக்கக் கூறி மாணவர்கள் கோரிக்கை வைத்தும், பள்ளி, கல்லுாரி செல்லும் நேரங்களில் போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை.
நேற்று காலை 9:30 மணியளவில் திண்டிவனத்திலிருந்து செஞ்சி செல்லும் தடம் எண். 40 என்ற அரசு டவுன் பஸ் பயணிகளுடன் புறப்பட்டது. இந்த, பஸ் அரசு கல்லுாரிக்கு செல்லாத நிலையில், கல்லுாரியைச் சேர்ந்த 20க்கு மேற்பட்ட மாணவர்கள் ஏறினர். செஞ்சி பஸ் நிறுத்தம் வந்தபோது, மாணவர்கள் டிரைவர், கண்டக்டரிடம், பஸ்சை செஞ்சிக்கு ஓட்டிச்செல்லும் முன், தங்களை கல்லுாரியில் விட்டுச் செல்ல வேண்டும் தகராறு செய்தனர்.
அதற்கு டிரைவர், பயணிகளுடன் செஞ்சிக்குச் செல்லும் பஸ்சை எப்படி கல்லுாரிக்கு ஓட்டிச்செல்ல முடியும் என கூறியும், மாணவர்கள் தொடர்ந்து அடம்பிடித்தனர்.
கல்லுாரி மாணவர்களின் நெருக்கடியாலும், அப்பகுதியில் 10 நிமிடங்களாக போக்குவரத்து பாதித்ததாலும், அரசு பஸ் டிரைவர், செஞ்சிக்கு செல்ல வேண்டிய பஸ்சை, திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லுாரிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனால், அப்பகுதியில் பரபரப்புநிலவியது.