/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பட்டதாரி பெண் மாயம் போலீஸ் விசாரணை
/
பட்டதாரி பெண் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : ஆக 02, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டதாரி பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் வி.ஏ.ஓ., நகரைச் சேர்ந்தவர் கோபி மகள் கார்த்திகா, 23; பி.எட்., படித்து விட்டு, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே அழகு நிலையம் வைத்துள்ளார். இவர், கடந்த 30ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.