sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு

/

அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு

அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு

அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு


ADDED : செப் 01, 2024 04:50 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லுாரிகளான விழுப்புரம், திண்டிவனம், பண்ருட்டி, காஞ்சிபுரம், ஆரணி கல்லுாரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா, விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரியில் நடந்தது.

கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அண்ணா பல்கலை வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஆபிரகாம், மின் மற்றும் மின்னணு பொறியியல் புல உறுப்பினர் உஷா முன்னிலை வகித்தனர்.

பல்கலை இணைவேந்தரான அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளில் பயின்ற 669 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:

கருணாநிதி ஆட்சியில் தான் அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகள் கொண்டு வரப்பட்டது. அவரது ஆட்சியில் தான் அரசு கலைக் கல்லுாரி, பொறியியல், மருத்துவ கல்லுாரிகள் கொண்டு வரப்பட்டது.

அவரது வழியில், முதல்வர் ஸ்டாலின், ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் கண்டிப்பாக உயர்கல்வி பயில வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

நீங்கள் எந்த துறையை தேர்வு செய்தாலும், அதில் முதல் நபராக வர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 'நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு உயர்கல்வியில் 52 சதவீதம் பெற்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. மாணவர்கள் தங்களின் எதிர்கால செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு, தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பொன்முடி பேசினார்.

தொடர்ந்து, அமைச்சர் தலைமையில் மாணவர்கள் 'வருங்காலத்தில் தங்களுடைய பொறியியல் துறை சார்ந்த தொழிலில் நம்பகத் தன்மையோடு செயல்படுவேன்' என உறுதிமொழி ஏற்றனர்.

விழாவில், அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், அண்ணா பல்கலை பதிவாளர் பிரகாஷ், கல்லுாரி முதல்வர் செந்தில் மற்றும் அனைத்து பொறியியல் கல்லுாரி முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us