/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழலையர் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம்
/
மழலையர் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம்
ADDED : செப் 14, 2024 07:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் ஆசிரியர் நகர் வாசவி விக்னேஷ் வித்யா விருக்ஷம் மழலையர் பள்ளி யில் தாத்தா பாட்டிகள் தினம் நடந்தது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் கலைச்செல்வன் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஸ்ரீப்ரியா தலைமை வகித்தார். குழந்தைகள் நல மருத் துவர் சிவசங்கரி முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு தாத்தா, பாட்டிகளுக்கு நடந்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
வினாடி, வினா மற்றும் நேர்காணல் நிகழ்ச்சிகளை சோபாதேவி நடத்தினார். மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.