/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு கட்டும் ஆணை: அமைச்சர் வழங்கல்
/
வீடு கட்டும் ஆணை: அமைச்சர் வழங்கல்
ADDED : செப் 01, 2024 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 43 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சிவசண்முகம், சையத் முகமத் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மஸ்தான், 43 பயனாளிகளுக்கு 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலா 3.50 லட்சத்தில் வீடு கட்டும் ஆணையை வழங்கி பேசினார்.
தாசில்தார் தனலட்சுமி, ஒன்றிய துணைச் சேர்மன் விஜயலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் மாவட்ட கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.