ADDED : செப் 05, 2024 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே கணவன், மனைவி குடும்ப தகராறில் கணவ்ர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரவாண்டி அருகே உள்ள சித்தணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் ,55 :கூலி் தொழிலாளி. இவர் குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் வந்து தகராறில் ஈடுபடுவது வழக்கம். நேற்று குடித்துவிட்டு மனைவி சத்யாவிடம் தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த அவர் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டுக்கொண்டார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அவரது மனைவி சத்யா கொடுத்துள்ள புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.