ADDED : மார் 10, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே மனைவி, மகனைக் காணவில்லை என போலீசில், கணவர் புகார் அளித்துள்ளார்.
வளவனுார் அடுத்த வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 35; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்யா, 33; இவர்களுக்கு, 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்து, இளைய மகன் சிவப்பிரியனுடன் வெளியே சென்ற சத்யா, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அருண்குமார் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.