ADDED : பிப் 22, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச தாய் மொழி தின விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தமிழ் சங்கம் சார்பில் நடந்த விழாவில், சங்க தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கி தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
கூட்டத்தில், சங்க நிர்வாகிகள், சுகாதார ஆய்வாளர் முருகன், அண்ணா மலை, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.