ADDED : மார் 09, 2025 03:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு, தாளாளர் விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முதல்வர் வெங்கடேஷ் வரவேற்றார். புதுச்சேரி லுகாஸ், டி.வி.எஸ்., சென்னை ஸ்கெட்ச் விங்க் ஸ்டெட்டர் நிறுவனங்களின் மனித வள மேலாளர்கள் அருண் குமார், சந்தோஷ் ஆகியோர் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தினர். 89 மாணவர்களை தேர்வு செய்து பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
வேலைவாய்ப்பு அலுவலர் சரண்குமார், அனைத்து துறை பேராசிரியர்கள் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். துணை முதல்வர் மோகன் நன்றி கூறினார்.