ADDED : மார் 14, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டிசூர்யா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு கல்லூரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
விழுப்புரம் திரிஸ்டி கிரெளஸ் மென்பொருள் நிறுவனம் சார்பில் மேலாளர்கள் பால ஆனந்த், லட்சுமணன் ஆகியோர் முகாமில் பங்கேற்று கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய நேர்காணல் நடத்தி தேர்வு செய்து பணி நியமன ஆணையை வழங்கினர்.
மாணவர்களை கல்லூரி முதல்வர் சங்கர், துணை முதல்வர் ஜெகன், வேலைவாய்ப்பு அலுவலர் மனோ சந்தர் ஆகியோர் பாராட்டினர்.