sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயிலம் முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு

/

மயிலம் முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு

மயிலம் முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு

மயிலம் முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு


ADDED : மே 08, 2024 11:53 PM

Google News

ADDED : மே 08, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.

காலை 6:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு மூலவருக்கு மகா தீபாரானை, வழிபாடு நடந்தது. பின்னர் பகல் 12:00 மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

கிருத்திகை விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மலைக்கோவில் வளாகத்தில் ஏராளமானோர் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டனர்.

கிருத்திகையை முன்னிட்டு முன்னிட்டு இரவு 8:00 மணிக்கு உற்சவர் கிரிவல காட்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us