/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு
/
மயிலம் முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு
ADDED : மே 08, 2024 11:53 PM

மயிலம் : மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.
காலை 6:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு மூலவருக்கு மகா தீபாரானை, வழிபாடு நடந்தது. பின்னர் பகல் 12:00 மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
கிருத்திகை விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மலைக்கோவில் வளாகத்தில் ஏராளமானோர் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டனர்.
கிருத்திகையை முன்னிட்டு முன்னிட்டு இரவு 8:00 மணிக்கு உற்சவர் கிரிவல காட்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.