ADDED : ஆக 03, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 54; கூலித் தொழிலாளி. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
ரோஷணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.