sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கள்ளச்சாராயத்தை தடுக்க நடவடிக்கை : ஐ. ஜே.கே., மாநில நிர்வாகி வலியுறுத்தல்

/

கள்ளச்சாராயத்தை தடுக்க நடவடிக்கை : ஐ. ஜே.கே., மாநில நிர்வாகி வலியுறுத்தல்

கள்ளச்சாராயத்தை தடுக்க நடவடிக்கை : ஐ. ஜே.கே., மாநில நிர்வாகி வலியுறுத்தல்

கள்ளச்சாராயத்தை தடுக்க நடவடிக்கை : ஐ. ஜே.கே., மாநில நிர்வாகி வலியுறுத்தல்


ADDED : ஜூன் 20, 2024 08:30 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 08:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தால் பல உயிர்கள் பறிபோன சம்பவம் மிகுந்த மனவேதனை அளிப்பதாக, ஐ.ஜே.கே., மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் பல உயிர்கள் பறிபோன சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் 15க்கும் மேற்பட்டோர், கள்ளச்சாராயத்தால் பலியாகினர். ஓராண்டுக்குள் கள்ளக்குறிச்சியில் 35க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், கள்ளக்குறிச்சி பகுதியில், கள்ளச்சாராயம் அதிகளவில் விற்பனையாவது தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்திற்கு, கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதற்கு, மாநில அரசு உரிய தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us