ADDED : பிப் 22, 2025 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வழுதரெட்டியில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூகநீதி போராளிகளின் மணி மண்டபத்தை கலெக்டர் பார்வையிட்டார்.
விழுப்புரம், வழுதரெட்டியில் கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் நுாலகம், பராமரிப்பாளர் அறை, 21 சமூக நீதி போராளிகளுக்கான மணி மண்டபம் உள்ளது.
நினைவரங்கம் மற்றும் மணி மண்டபத்தை கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் ஆய்வு செய்து, பணியாளர்கள் விபரம், பராமரிப்பு பணிகள், தினசரி பார்வையாளர்கள் வருகை குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ், நகராட்சி கமிஷனர் வசந்தி உடனிருந்தனர்.

