/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானூர் அரசு கல்லூரியில் முத்தமிழ் விழா
/
வானூர் அரசு கல்லூரியில் முத்தமிழ் விழா
ADDED : ஏப் 26, 2024 11:58 PM

வானூர் : வானூர் அரசு கலைக்கல்லூரியில் முத்தமிழ் விழா நடந்தது.
வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள காந்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் முத்தமிழ் விழா நடந்தது.
உதவி பேராசிரியர் அகஸ்டின் ஜார்ஜ் செல்லம்மாள் வரவேற்றார். கல்லூரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, மொழி இலக்கியங்களில் முத்தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பல்கலைக்கழக சுப்ரமணிய பாரதியார் தமிழியற்புலம் துறைத்தலைவர் கருணாநிதி சிறப்புரையாற்றினார்.
விழாவில் அனைத்து துறை பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், அலுவலகப்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கவுரவ விரிவுரையாளர் பூஞ்சோலை நன்றி கூறினார்.

