/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விபத்தில் முதியவர் பலி; போலீஸ் விசாரணை
/
விபத்தில் முதியவர் பலி; போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 02, 2024 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே வாகன விபத்தில், அடிபட்டு இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வளவனுார் அடுத்த ஓட்டேரிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில், நேற்று முன்தினம் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சாலையாம்பாளையம் வி.ஏ.ஓ., முத்துக்குமரன் போலீசில் புகார் அளித்தார்.
வளவனுார் போலீசார் நேரில் சென்று, உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் யார் என்ற விபரம் தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

