ADDED : மே 28, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் ஆட்டோ மோதியதில் முதியவர் இறந்தார்.
திண்டிவனம் செஞ்சி ரோடு, ஹீராச்சந்த் கார்டன் பகுதியில் வசித்தவர் முகமது சுல்தான், 70; இவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் ரோஷணை பள்ளி வாசலில் தொழுகை முடித்துவிட்டு, செஞ்சி ரோடு வழியாக நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, முதியவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முதியவர் வழியிலேயே இறந்துவிட்டார்.
புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.