sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக் மோதி முதியவர் பலி

/

பைக் மோதி முதியவர் பலி

பைக் மோதி முதியவர் பலி

பைக் மோதி முதியவர் பலி


ADDED : ஆக 25, 2024 06:17 AM

Google News

ADDED : ஆக 25, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் பைக் மோதி இறந்தார்.

திண்டிவனம் வீராங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ், 75; இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் அதே பகுதியில் உள்ள திண்டிவனம் - சென்னை புறவழிச்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி பல்சர் பைக்கில் சென்றவர், செல்வராஜ் மீது மோதினார்.

இந்த விபத்தில், படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பைக்கில் வந்த திருவண்ணாமலை, குமரன் நகரைச் சேர்ந்த சுரேஷ் மகன் தினேஷ், 19; விருத்தாசலம் பெரியார் நகர் ரமேஷ் மகன் சபரி நிவாஸ், 20; சீர்காழி, வடகால் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மகன் பிரேம்குமார், 19; ஆகிய மூன்று பேரும் படுகசாயமடைந்தனர். 3 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us