ADDED : செப் 01, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அருகே பைக் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.
திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன், 70; திண்டிவனம் மரவாடியில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் பணிக்கு வந்தவர், சாரம் மெயின் ரோட்டை கடக்க முயன் றார்.
அப்போது சென்னை யிலிருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற பைக் முதியவர் மீது மோதியது. படுகாயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.