ADDED : செப் 01, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே ரயில் பாதையை கடந்தவர் ரயில் மோதி இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு, மதுரா சாமியாடி குச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 55; கூலித் தொழிலாளி. இவர், நேற்று காலை 9:30 மணியளவில் அப்பகுதியில் உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றார்.
அப்போது சென்னை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திண்டிவனம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.