ADDED : செப் 14, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார், நேற்று மாலை, விழுப்புரம் அருகே சாலை அகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந் தனர்.
அப்போது, சாலைஅகரம் ஏரிக்கரை அருகே விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன், 44; என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றதால், அவரை பிடித்து விசாரித்ததில், அவரிடம், தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள், ஆவணங்கள் இருந்தது தெரிந்தது.
உடனே அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, ஆட்டோ, மொபைல்போன் பணம் ரூ.600 பறிமுதல் செய்தனர்.