/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு
ADDED : ஆக 03, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார், போக்சோ வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னகண்ணு மகன் ரவிந்திரன், 29; இவர், 16 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி 24ம் தேதி பலாத்காரம் செய்துள்ளார். இதில், அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமானார்.
இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ரவிந்திரன் மீது விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.