ADDED : ஜூன் 03, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : சிறுமியை சைகை காட்டி அழைத்த முதியவர் மீது போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு இ.பி.,காலனி பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 72; இவர், கடந்த 24ம் தேதி, 15 வயது சிறுமியை தவறான முறையில் சைகை காட்டி அழைத்துள்ளார்.
இது குறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், சுந்தரமூர்த்தி மீது, போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.