ADDED : மார் 06, 2025 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், எரும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 38; கூலித் தொழிலாளி. இவர், வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். நேற்று முன்தினம் ஏற்பட்ட வலியால் மனமுடைந்த அவர், அவலுார்பேட்டை மங்கலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே, விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.