/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொன்முடி மீதான குவாரி வழக்கு காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சாட்சியம்
/
பொன்முடி மீதான குவாரி வழக்கு காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சாட்சியம்
பொன்முடி மீதான குவாரி வழக்கு காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சாட்சியம்
பொன்முடி மீதான குவாரி வழக்கு காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சாட்சியம்
ADDED : ஆக 13, 2024 04:48 AM
விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான குவாரி வழக்கில், காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சாட்சியம் அளித்தார்.
விழுப்புரம் அடுத்த பூத்துறை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்தனர்.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் மொத்தமுள்ள 67 சாட்சிகளில் 49 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
நேற்று நடந்த விசாரணையில், முன்னாள் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டரான தற்போதைய காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சக்திவேல் சாட்சியம் அளித்தார்.
அப்போது அவர், ஜெயச்சந்திரன் வீட்டில் சோதனை செய்து, 4 ஆவணங்களை கைப்பற்றியதாக சாட்சியம் அளித்தார். அதனை பதிவு செய்த நீதிபதி பூர்ணிமா, வழக்கின் பிற சாட்சிகள் விசாரணை நாளை (இன்று) தொடரும் என அறிவித்தார்.

