/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நலத்திட்ட உதவி அமைச்சர் வழங்கல்
/
நலத்திட்ட உதவி அமைச்சர் வழங்கல்
ADDED : ஆக 10, 2024 05:20 AM

திண்டிவனம்: மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் வரவேற்றார். திண்டிவனம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், ஒன்றிய சேர்மன்கள் சொக்கலிங்கம், தயாளன், துணைச் சேர்மன் பழனி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
அமைச்சர் மஸ்தான் மாற்றுத் திறனாளிகள் 44 பேருக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர், 11 பேருக்கு தையல் இயந்திரம், பார்வையற்ற 9 பேருக்கு மொபைல் போன் என 64 பயனாளிகளுக்கு 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
விழாவில், நகராட்சி மேலாளர் நெடுமாறன், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், ஆடிட்டர் பிரகாஷ், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.