sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அமைச்சர் மீதான குவாரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

/

அமைச்சர் மீதான குவாரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் மீதான குவாரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் மீதான குவாரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு


ADDED : பிப் 15, 2025 05:00 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்து வரும் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை கிராமத்தில் உள்ள அரசு செம்மண் குவாரியில், விதிமீறி செம்மண் எடுத்ததால், அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, சதானந்தம், ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாதன், கோதகுமார், லோகநாதன் ஆகியோர் மீது, கடந்த 2012ம் ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.

இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 67 பேர், அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, அதில், தற்போது 51 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். 30 பேர், அரசு தரப்பிற்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சதானந்தம், ஜெயச்சந்திரன், கோபிநாதன் ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ராஜசிம்மவர்மன், விசாரணையை வரும் மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us