sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரெட்டணை கிரீன் பாரடைஸ் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை

/

ரெட்டணை கிரீன் பாரடைஸ் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை

ரெட்டணை கிரீன் பாரடைஸ் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை

ரெட்டணை கிரீன் பாரடைஸ் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை


ADDED : மே 15, 2024 11:42 PM

Google News

ADDED : மே 15, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ரெட்டணையில் இயங்கி வரும் கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 30 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இதில் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பள்ளியில் 449 மதிப்பெண்கள் பெற்று மாணவி அர்ச்சனா முதலிடமும், மாணவர்கள் வைஷ்ணவ் 436 , செந்தில் 435 மதிப்பெண்கள் பெற்று முறையே இரண்டு மற்றும் 3ம் இடம் பெற்றனர்.

மேலும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 7 மாணவர்களும், 350 மதிப்பெண்களுக்கு மேல் 9 பேரும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளி துவங்கி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை படைத்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சண்முகம், இயக்குனர் வனஜா சண்முகம், செயலாளர் சந்தோஷ், முதல்வர் லட்சுமி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

இது குறித்து பள்ளி தாளாளர் சண்முகம் கூறுகையில், பள்ளி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளாக பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்கு பாடுப்பட்ட, ஆசிரியர்கள், மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.






      Dinamalar
      Follow us