sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...

/

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...


ADDED : மார் 31, 2024 06:38 AM

Google News

ADDED : மார் 31, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வி.சி., கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து விழுப்புரத்தில் பேசிய பொன்முடி கூட்டம் இல்லாததால் நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.

விழுப்புரத்தில் நேற்று முன்தினம் முதல் நாள் பிரசாரத்தை சிக்னல் சந்திப்பில் நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு தொடங்கினர். பிரசாரத்தில் கூட்டம் இல்லாததால், முகம் சுளித்தபடி வேட்பாளர் ரவிக்குமாரை பார்த்து, 'ஏன் கூட்டத்தை சேர்க்கல, கட்சிக்காரங்க எங்கே' என கேட்டவர், அருகில் நின்றிருந்த தி.மு.க., நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.

கூட்டம் இல்லாவிட்டாலும் ஏரியாவுக்கு தகுந்தபடி வழக்கமான பாணியில் பேசினார், நகைக்கடை தெருவில், அங்கிருந்து நகை வியாபாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு சகஜமாக பேசினார். திரு.வி.க., வீதியில் ஒரு புத்தகக் கடை அருகே, 'நான் வேலை பார்த்தபோது இந்த கடையில் தான் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பேன் எனபழைய ஞாபகம் நினைவுக்கு வருகிறது' என்றார்.

மேலும், அந்த கடையில் இருந்த, தனது கடை உரிமையாளரான பழைய தோஸ்த்தை மைக்கிலேயே கூப்பிட்டு, நலம் விசாரித்தார்.






      Dinamalar
      Follow us