ADDED : ஆக 31, 2024 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: கிணற்றில் விழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையின் உயிருடன் மீட்டனர்.
திண்டிவனம் கசாமியன் தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மாள், 45; மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இவர், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
இதுபற்றி தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் இறங்கி, நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மாரியம்மாளை மீட்டனர்.